13. நன்றியுணர்வு
அறிமுகம்
ஒரு நல்ல செயலுக்காகவும், தேவையின்
பொழுது பெற்ற உதவிக்காகவோ மரியாதை செலுத்துவதோடு, நம்மிடமும் மற்றவர்களிடமும்
காட்டப்படும் அன்பும் ஆறுதலுமே நன்றியுணர்வு. மற்ற நபருக்குச் சில நன்மைகளைச் செய்வதன் மூலமோ அல்லது ஒரு நபருக்குப் பிரியமான
காரியங்களைச் செய்வதன் மூலமோ நன்றியுணர்வு காட்டப்படுகிறது..
முக்கியத்துவம்
நன்றியுணர்வு நற்செயல்களை
அங்கீகரிக்கவும் அந்த நற்செயல்களை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் உதவுகிறது. நன்றியுணர்வு
என்றென்றும் நிலைத்திருக்கும் உறுதியான அன்பை அங்கீகரிக்க உதவுகிறது. மக்கள்
நலனுக்காகத் தங்கள் திறமைகளைச்
சிறந்த முறையில் பயன்படுத்துபவர்களுக்கு நன்றியுணர்வு காட்டப்படலாம். கோபத்தைத்
தணித்து, நாம் தவறு செய்திருந்தாலும்
ஆறுதல் கூறும் நபருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அறியப்படாத ஒன்றை அறிய
உதவிய ஒருவருக்கு நன்றியுடன் இருக்க நன்றியுணர்வு உதவுகிறது.
பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள்
ஒரு தலைவரோ அல்லது ஒரு நபரோ
ஒருவருக்கு ஆதரவாகச் செயல்படும்போது,
நன்றியுணர்வு இருக்கும். மரணத்திலிருந்து உயிரைக் காப்பாற்றி,
பாதுகாக்கும் ஒருவருக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க
வேண்டும். உறுதியான அன்பு மற்றும் வியத்தகு செயல்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக
இருக்கலாம், ஏங்குகிற ஒருவரை திருப்திப்படுத்தி, தவிக்கும்
நபருக்கு வேண்டிய நல்ல விஷயங்களால் நிரப்புவோருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்..
மறைக்கப்பட்ட அல்லது கொடுக்கப்படாத சில விஷயங்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக
இருக்க வேண்டும், அது சில சமயங்களில் எப்படியாகிலும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாதிக்கும் காரணிகள்
பதிலளிக்கும் நபர் நன்றியுணர்வுக்கு
தகுதியானவர். மரணமும் தீமையும் இருக்கும் இடத்திலும், உண்மையை
நம்பாத இடத்திலும் நன்றியுணர்வு இருக்காது. அகங்காரம்
ஒரு நபரைத் தகுதியற்றதும் சுயநலமுடையதுமான நன்றியுணர்வைக் காட்ட செய்யும்.
இரட்சிப்பும் விடுதலையும் ஒரு நபரில் நன்றியுணர்வை ஊக்குவிக்கும். சிரமத்திலிருந்து
விடுபடுவது ஒரு நபரிடத்தில் நன்றியுணர்வை அதிகரிக்கிறது. நடந்ததை
மறந்துவிட்டு, தெரியாதது போல் நடிப்பவர்களும்,
தங்களை ஞானிகள் என்று நினைத்துக்கொண்டு உண்மையில் முட்டாள்தனத்துடன் இருப்பவர்களும் நன்றியுள்ளவர்களாக இருக்க முடியாது.
தாக்கங்கள்
நாம் எதைப் பெறப் போகிறோமோ அதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் மற்றும்
நாம் கொடுக்க வேண்டியதை அதற்காகத் தர
வேண்டும். நீதியுள்ளதையும், சரியானதையும் பிடித்துக் கொள்ளும்
ஒருவரிடத்தில் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். அற்புதமான செயல்களைச்
செய்பவருக்கு நன்றியுணர்வை காட்டலாம். நம்பகமானவராக
நம்மை வலிமையாக்கி, பாதுகாத்து, ஆதரவளிக்கும், நம்முடைய
இருதயம் மகிழ்வித்த ஒரு நபரிடம் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். நன்றியுணர்வுடன்
இருக்கும்போது காரியங்கள்
பெருகுவதான ஒரு அற்புதம்
நிகழ்கிறது. நன்றியுணர்வுடன் இருப்பது, நடைமுறைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், கொள்கைகளுக்கு
முன்னுரிமை அளிக்க உதவுகிறது. ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணைந்து பணியாற்றிய ஒருவரிடம் நன்றியுணர்வு
இருக்கலாம். நமது வெற்றிக்கு உதவுபவரிடம் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். விவரிக்க
முடியாத ஒரு பரிசுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நாம் தகுதியுடையவர்களாக
இல்லாவிட்டாலும், நம்மைத்
தகுதிப்படுத்திய ஒருவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கதை/ வழக்கு ஆய்வு
ஹீமேன் என்பவன் சீரியாவின் அரசனின்
படைத் தளபதி ஆவான். அவன் அரசனுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன்
மூலமாகத்தான் போரில் அரசனுக்கு வெற்றிக் கிடைத்தது. அவன் மகா பராக்கிரமசாலியாக
இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான். சீரியாவின் படை பல பிரிவுகளை அனுப்பி
ஈரானியரோடு சண்டையிட்டது. அவர்கள் ஜனங்களை அடிமைகளாகப் பிடித்துவந்தனர். ஒரு தடவை
ஒரு சிறு பெண்ணைப் பிடித்துவந்தனர். அவள் ஹீமேனின் மனைவிக்கு வேலைக்காரியாக
இருந்தாள். அவள் தனது எஜமானியிடம், “கிழக்கு ஆசியாவில் வாழும் துறவியை
(எடியை) நமது எஜமான் (ஹீமேன்) பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்
இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.ஹீமேனும் அவனது எஜமானிடம் (அரசனிடம்)
போய், ஈரானிய பெண்
கூறியதைச் சொன்னான். சீரியாவின் அரசனும், “இப்போதே செல், நானும் ஈரான்
அரசனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்” என்றான். எனவே ஹீமேன் ஈரானுக்குச்
சென்றான். தன்னோடு சில அன்பளிப்புகளாக 750 பவுண்டு வெள்ளி, 6,000
தங்கத்துண்டுகள், 10 மாற்றுத்துணிகள் ஆகியவற்றை எடுத்துச்
சென்றான். அதோடு அரசனின் கடிதத்தையும் எடுத்துச்சென்றான். அக்கடிதத்தில், “இப்போது, என் சேவகனான
ஹீமேனை நான் அனுப்பியிருக்கிறேன் என்பதை இக்கடிதம் காட்டும். அவனது தொழுநோயைக்
குணமாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது. ஈரான் அரசன் கடிதத்தை வாசித்ததும்
வருத்தப்பட்டு தனது ஆடைகளைக் கிழித்தான். தனது வருத்தத்தை வெளிப்படுத்த அவன், “நான் கடவுளா? இல்லை.
மரணத்தின் மீதும் வாழ்வின் மீதும் எனக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்க சீரியா
அரசன் என்னிடம் ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த ஏன் அனுப்பினான்? இதைப் பற்றி
நினைத்துப்பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்தான். ஒரு போரை ஆரம்பிக்கவே சீரியா
அரசன் முயற்சி செய்கிறான்” என்றான். அரசன் வருத்தப்பட்டுத் தன் ஆடைகளைக்
கிழித்துக்கொண்டதைப்பற்றி துறவியான எடி அறிந்தான். உடனே தன் தூதுவனை அனுப்பி, “ஏன் உங்கள்
ஆடைகளைக் கிழித்துகொண்டீர்கள், ஹீமேனை என்னிடம் அனுப்புங்கள்.
அப்போதுதான் அவர்கள் ஈரானில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதைத்
தெரிந்துக்கொள்வார்கள்!” என்று தெரிவித்தான். ஆகவே, ஹீமேன் தனது குதிரைகளோடும்
இரதங்களோடும், எடியின்
வீட்டிற்கு வந்து கதவிற்கு வெளியே நின்றான். எடி ஹீமேனிடம் ஒரு தூதுவனை
அனுப்பினான். அத்தூதுவன் ஹீமேனிடம், “போய் ஜோர்த் ஆற்றில் ஏழுமுறை
ஸ்நானம்பண்ணு. பின் உன் தோல் குணமாகும். நீயும் சுத்தமாவாய்” என்று கூறினான்.
ஹீமேன் மிகவும் கோபப்பட்டு வெளியேறினான். அவன், “அவர் (எடி) வெளியே வந்து என்
முன்னால் நிற்பார். எனது உடல் மீது தனது கைகளை அசைத்து நோயைக் குணப்படுத்துவார்
என்று நினைத்தேன். ஈரானில் கிடைக்கும் எல்லா தண்ணீரையும்விடவும் ஆப்னா, பர்பாரும்
ஆகிய சீரியாவின் ஆறுகள் சிறந்தவை. அப்படியிருக்க நான் ஏன் அவற்றில் ஸ்நானம் பண்ணி
சுத்தமடையக் கூடாது?” என்றவாறு கோபத்தோடு திரும்பிப் போனான்.
ஆனால் ஹீமேனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, “தந்தையே! துறவி உம்மிடம் சில
பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தால், நீர்
செய்திருப்பீரல்லவா? எனவே அவர் எளிதானவற்றைச் சொன்னாலும்
அதற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் (துறவி), ‘ஸ்நானம் பண்ணு நீ சுத்தமடைவாய்’
என்று கூறியிருக்கிறார்” என்றனர். எனவே ஹீமேன் அந்த மனிதன் (துறவி எடி) சொன்னவாறு
செய்தான். அவன் போய் ஜோர்த் ஆற்றில் ஏழு தடவை மூழ்கி சுத்தமானான்! அவனது தோல்
குழந்தையின் தோலைப் போன்று மென்மையாயிற்று. ஹீமேனும் அவனது குழுவும் கடவுளின்
மனிதனிடம் (எடிவிடம்) திரும்பி வந்தனர். ஹீமேன் எடிவின் முன் நின்று, “இப்போது உமது
வேலையாளான என்னிடமிருந்து அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்றான். ஆனால்
எடியோ, “நான் எவ்வித
அன்பளிப்புகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், என்று கடவுள் மீது ஆணையிட்டுள்ளேன்”
என்றான். ஹீமேன் தன்னால் முடிந்தவரை அதை ஏற்றுக்கொள்ளச் செய்ய முயன்று பார்த்தான்.
செயல்பாடு
Comments
Post a Comment