13. நன்றியுணர்வு
13. நன்றியுணர்வு அறிமுகம் ஒரு நல்ல செயலுக்காகவும் , தேவையின் பொழுது பெற்ற உதவிக்காகவோ மரியாதை செலுத்துவதோடு , நம்மிடமும் மற்றவர்களிடமும் காட்டப்படும் அன்பும் ஆறுதலுமே நன்றியுணர்வு. மற்ற நபருக்கு ச் சில நன்மைகளைச் செய்வதன் மூலமோ அல்லது ஒரு நபருக்குப் பிரியமான காரியங்களைச் செய்வதன் மூலமோ நன்றியுணர்வு காட்டப்படுகிறது.. முக்கியத்துவம் நன்றியுணர்வு நற்செயல்களை அங்கீகரிக்கவும் அந்த நற்செயல்களை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் உதவுகிறது. நன்றியுணர்வு என்றென்றும் நிலைத்திருக்கும் உறுதியான அன்பை அங்கீகரிக்க உதவுகிறது. மக்கள் நலனுக்காக த் தங்கள் திறமைகளை ச் சிறந்த முறையில் பயன்படுத்துபவர்களுக்கு நன்றியுணர்வு காட்டப்படலாம். கோபத்தைத் தணித்து , நாம் தவறு செய்திரு ந்தாலும் ஆறுதல் கூறும் நபருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அறியப்படாத ஒன்றை அறிய உதவிய ஒருவருக்கு நன்றியுடன் இருக்க நன்றியுணர்வு உதவுகிறது. பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள் ஒரு தலைவரோ அல்லது ஒரு நபரோ ஒருவருக்கு ஆதரவா கச் செயல்படும்போது , நன்றியுணர்வு இருக்கும். மரணத்திலிருந்து உயிரைக் காப்பாற்றி , பாதுகாக்கும் ஒருவருக்கு ...