5. பொறுப்பு
5. பொறுப்பு
அறிமுகம்
பொறுப்பு
என்பது ஒரு நபர் தான் வகிக்கும் பங்கின்
ஒரு பகுதியாகவோ அல்லது யாரோ ஒருவர் தன் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் கொடுக்கப்பட்ட ஒரு பணியை முடிப்பதாகவோ அல்லது ஏதோ ஒன்றை கவனிப்பதாகவோ இருக்கலாம். மேலும், பொறுப்பு என்பது சூழ்நிலை அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் ஒருவர் ஒரு பணியை முடிப்பது அல்லது ஏதோ ஒன்றை கவனிப்பது.
பொறுப்புள்ள ஒரு நபர், உரிமையாளரிடமோ அல்லது தலைவரிடமோ உள்ள
எல்லாவற்றின் மீதும் ஒரு அதிபதியாக நியமிக்கப்படுவார்,
மேலும் அவர் நம்பி ஒப்படைக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றுவார். ஒரு
பொறுப்புள்ள நபர் தனது எஜமானர்களுக்கு மட்டுமல்ல, தனது கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கும் செவிக்கொடுக்கிறார்.
முக்கியத்துவம்
சிலருக்கு
பல விஷயங்களைச் செய்யும் திறன் இருந்தாலும், நேரம் மற்றும் போதிய ஆற்றல் இல்லாததால், எல்லாவற்றையும் எல்லோராலும் செய்ய முடியாது. ஏற்கனவே பல விஷயங்களில் நாம் ஈடுபட்டிருக்கும்போது,
திறமையாகவும் முழுமையாகவும் பணிகளைச் செய்வதற்கு, திறமையுடன் கூடத் தயாராக இருப்பவருக்குப்
பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். நாம் சில பொறுப்பை ஏற்கும்போதோ அல்லது சில பொறுப்புகள் கொடுக்கப்படும் போதோ
மட்டுமே நாம் பொறுப்புக் கூறுவோம், மேலும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை நிறைவேற்றுவதற்கு
நம்மால் முடிந்த முயற்சியை மேற்கொள்வோம்.
பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள்
யாராவது
நம்மைப் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும்,
நம் அதிகாரிகள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளுக்கு நாம்
பொறுப்பேற்க வேண்டும். நாம் இணைந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் பொறுப்பு. ஏதோவொன்றில் வலுவாக இருப்பவர்கள் பலவீனமானவர்களை
உயர்த்துவதற்குப் பொறுப்பாளிகள், அவர்களின் நல்வாழ்வில்
உண்மையான அக்கறை காட்டலாம்.
பாதிக்கும் காரணிகள்
சோம்பேறித்தனம்
ஒரு நபரைப் பொறுப்பற்றவராக ஆக்கி, தன்னிடம் உள்ள அனைத்தையும்
இழக்க நேரிடும். நமது அதிகாரம், பதவி, உடைமை
ஆகியவை நமது பொறுப்புணர்வை பெரிய அளவில் பாதிக்கலாம். நமது
முன்னுரிமைகள், நமது ஆர்வங்கள் மற்றும் நமது திறன்களும்
கூட நமது பொறுப்புணர்வை பாதிக்கலாம்.
தாக்கங்கள்
ஒரு
பொறுப்புள்ள நபர் ஒழுக்கமாக இருப்பார், வாழ்க்கையின் உயர்ந்த தரங்களையும் மதிப்பீடுகளையும்
பின்பற்றுவார். அவர் மற்றவர்களுக்கு மேலானவர் மற்றும்
நிந்தைக்கு அப்பாற்பட்ட தலைவர். அவர் திமிர்பிடித்தவராகவோ,
சீக்கிரம் கோபமடைபவராகவோ, குடிகாரனாகவோ, வன்முறையில் ஈடுபடுபவராகவோ அல்லது
ஆதாயத்திற்காகப் பேராசை கொண்டவராகவோ இருக்க மாட்டார்,
ஆனால் விருந்தோம்பல், நன்மை, சுயக்கட்டுப்பாடு,
நேர்மை, பரிசுத்தம், ஒழுக்கம்
ஆகிய பண்புகளைக் கொண்டவர். ஏற்கனவே தன்னிடம் உள்ளவற்றை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக
பொறுப்புகள் கொடுக்கப்படும்.
கதை/ வழக்கு ஆய்வு
ஒரு
மனிதன் தன் வீட்டை விட்டு வேறொரு இடத்திற்குப் பயணமானான். புறப்பட்டுச் செல்வதற்கு
முன் அவன் தனது மூன்று வேலைக்காரர்களுடன் பேசினான். தான் புறப்பட்டுச் சென்றபின்
தனது உடமைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொன்னான். ஒவ்வொரு
வேலைக்காரனும் எதைப் பார்த்துக் கொள்ள முடியுமென அவன் தீர்மானித்தான். அதற்கேற்ப
ஒருவனிடம் ஐந்து பை நிறையப் பணமும் மற்றொருவனிடம் இரண்டு பை நிறையப் பணமும்
மூன்றாவது வேலைக்காரனிடம் ஒரு பை நிறையப் பணமும் கொடுத்தான். பின் அவன்
புறப்பட்டுப் போனான். ஐந்து பை பணம் பெற்றவன் விரைந்து அப்பணத்தை முதலீடு
செய்தான். அது மேலும் ஐந்து பை பணத்தை ஈட்டித் தந்தது. அதே போல இரண்டு பை பணம்
பெற்றவனுக்கும் நடந்தது. அவன் தான் பெற்ற இரண்டு பை பணத்தை முதலிட்டு மேலும்
இரண்டு பை பணம் ஈட்டினான். ஆனால், ஒரு பை பணம்
பெற்றவனோ நிலத்தில் ஒரு குழி தோண்டி தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.
“நீண்ட காலம் கழித்து எஜமானன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். தன் பணத்தை என்ன
செய்தார்கள் எனத் தன் மூன்று வேலைக்காரர்களிடமும் கேட்டான். ஐந்து பை பணம் பெற்ற
வேலைக்காரன் மேலும் ஐந்து பை பணத்தைக் கொண்டு வந்து தன் எஜமானிடம் சொன்னான், ‘எஜமானே!
நீர் என்னை நம்பி ஐந்து பை பணம் தந்தீர்கள். ஆகவே, நான்
அதை முதலிட்டு மேலும் ஐந்து பை பணம் ஈட்டியுள்ளேன்!’ என்றான். “அதற்கு எஜமானன், ‘நீ
செய்தது சரி. நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிது பணத்தைக்
கொண்டு நன்கு செயல்பட்டாய், மேலும் பெரிய
பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்!’
என்றான். “பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள்
என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம்
ஈட்டியுள்ளேன்’ என்றான். “அவனுக்கு எஜமான், ‘நீ
செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிய
பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும்
பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு
கொள்!’ என்றான். “பின் ஒரு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர்
மிகவும் கடினமானவர் என்பது எனக்குத் தெரியும். விதைக்காமலேயே அறுவடை செய்கிறவர்
நீர். செடி நடவாமலேயே தானியங்களை சேர்க்கிறவர் நீர். எனவே, நான்
பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள்
தந்த ஒரு பை பணம்’ என்றான். “எஜமான் அவனை நோக்கி, ‘நீ
ஒரு மோசமான சோம்பேறி வேலைக்காரன். நான் விதைக்காமலேயே அறுவடை செய்வதாகவும்; நடாமலேயே
தானியங்களை சேகரிப்பதாகவும் கூறுகிறாய். எனவே நீ என் பணத்தை வங்கியில்
செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான்
திரும்பி வரும்பொழுது, என் பணமும்
எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்றான். “ஆகவே, எஜமானன், தன்
மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து, ‘அந்த
வேலைக்காரனிடமிருந்து அந்த ஒரு பை பணத்தை வாங்கி அதை பத்து பை பணம்
வைத்திருப்பவனிடம் கொடுங்கள்’ என்றான்.
செயல்பாடு
Comments
Post a Comment