6. அணுகல்
6. அணுகல்
அறிமுகம்
அணுகல்
என்பது தேவையில் உள்ளவர்களோ அல்லது நாம்
கடமைப்பட்ட எவரும் பயன்பெற கூடியவராகவும் அணுகக்கூடியவராகவும் இருப்பது.
கறையுள்ளவர்கள் பரிபூரணமானதை அணுகமாட்டார்கள் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ள கூடியது,
அதனால் கறையுள்ளவர்கள் பரிபூரணமானவர்களை அணுக
முடியாது. ஏழைகள், தேவையிலுள்ளவர்கள் அல்லது மனம்
உடைந்தவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளாமல், அவர்களைத் திண்டாடச் செய்தவர், பூமியில்
வாழ்ந்து முடித்த பிறகு நினைவுகூரப்படமாட்டார். மனதில் தீமையை விதைத்து விதவை, தகப்பனற்றவர்,
அந்நியர், ஏழைகள் ஆகியோரை துன்புறுத்துபவர் அவர்களின் வாழ்க்கையில்
ஓய்வைக் காணமாட்டார், மேலும் அவர்களின் முயற்சிகள் அர்த்தமற்றதாக இருக்கும்.
முக்கியத்துவம்
அணுகல்தன்மை
ஒரு சாதாரண நபரும் கூட மிகுந்த அதிகாரமும்
ஆற்றலும் உள்ளவரை, நம்பிக்கையுடனும், கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புடனும் அணுக
அனுமதிக்கிறது. தேவையிலுள்ளவர்கள் அணுக அனுமதிப்பது அவர்களுக்கு ஆறுதலளிக்க அவசியம், மேலும் நம்
கஷ்டங்களில் நம்மை ஆறுதல்படுத்தக்கூடிய ஒருவரை அணுகுவதும் முக்கியம்.
பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள்
நாம்
பிரச்சனையின் மத்தியில் இருக்கும்போது, சிக்கலைத் தீர்ப்பதில் உதவக்கூடிய சிலரை நாம் அறிந்தால், அந்த நபரை அணுகுவதற்கான வாய்ப்பைத் தேடலாம். நமது
வழக்கமான பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளைப் பொருட்படுத்தாமல், தேவையில் உள்ள மக்களுக்கு நாம் அணுகக்கூடியவர்களாக
இருக்கலாம்.
பாதிக்கும் காரணிகள்
அணுகலுக்கு
நிறைய நம்பிக்கை தேவை மற்றும் நம்பிக்கை இன்மையால், அது மறுக்கப்படலாம். ஆனால் நம்பிக்கை உடைந்தாலும், மற்ற
நபருக்கு உதவ ஒரு நபர் அணுகுவதற்கு ஏதுவாக இருக்க முடியும்.
யாரோ ஒருவர் மீதோ அல்லது ஒரு குழுவினர் மீதோ உள்ள பயம் அல்லது பாகுபாடு காரணமாக, அணுகல்
மறுக்கப்படலாம். பயம் மெதுவாக நீக்கப்பட வேண்டும் மற்றும் எந்த விதத்திலான பாகுபாடாயினும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.
மேலும், அதிகாரம் மற்றும் பதவியின் பெருமை காரணமாக, சிலருக்கு அணுகல் மறுக்கப்படுகிறது. ஆனால் தாழ்மை
என்பது ஒருவரின் சுய உடைமையாக எப்பொழுதும் இருக்க வேண்டும்,
மேலும் அவர் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும்.
தங்கள்
வாழ்க்கையில் சரியான வழியில் உயர்ந்த மதிப்பீடுகள் மற்றும் தரநிலைகளுடன் நடப்பவர்கள் ஆட்சியாளர்களாகவும்
பொறுப்பாளர்களாகவும் இருப்பார்கள், மேலும் மிகவும்
மதிப்புமிக்க இடங்களுக்கு அணுகலைப் பெறுவார்கள். நம்மிடம் சரியான நம்பிக்கை
இருக்கும் போது, நமக்கு தைரியம் இருக்கும் மற்றும்
நம்பிக்கையுடன் எதையும் அணுகலாம். எளிதாக சந்திக்கக்கூடியவரும் அணுகக்கூடியவருமான ஒரு நபர் ஒரு நல்ல தலைவராக
இருக்க முடியும். நாம் அன்பாகவும், மக்களுக்கு
அணுகக்கூடியவர்களாகவும் இருக்கும்போது, அவர்கள் நமக்கு
தேவைப்படும் நேரத்தில் அக்கரையும் ஆதரவும் கொடுப்பார்கள்.
கதை/ வழக்கு ஆய்வு
டேவ், “ஷாமின்
வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான்
அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். ஜோன்ஸ் நிமித்தம் நான் இதைச் செய்ய
விரும்புகிறேன்” என்று கூறினான். ஷாமின் குடும்பத்தை சேர்ந்த சென் என்னும்
வேலைக்காரன் இருந்தான். டேவின் பணியாட்கள் சென் ஐ டேவிடம் அழைத்து வந்தனர். டேவ்
அரசன், சென்னிடம், “நீ சென்னா?” என்று
கேட்டான். சென், “ஆம் நான் உங்கள் பணியாளாகிய சென்”
என்றான். அரசன், “ஷாமின் குடும்பத்தில் யாராவது
உயிரோடிருக்கிறார்களா? இரக்கத்தை
நான் அவனுக்குக் காட்ட வேண்டும்” என்றான். டேவிடம், “ஜோன்ஸ்க்கு
இரு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான்” என்று சென் சொன்னான். அரசன் சென் ஐ
நோக்கி, “அந்த
மகன் எங்கே இருக்கிறான்?” என்று
கேட்டான். சென், அரசனிடம், “துபாயில்
ஆன்டனின் மகனாகிய மோயன் வீட்டில் அவன் இருக்கிறான்” என்றான். டேவ் அரசன்
பணியாட்களை துபாயில் உள்ள ஆன்டனின் மகனாகிய மோயன் வீட்டிலிருந்த ஜோன்ஸ் இன் மகனை
அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான். ஜோன்ஸ் இன் மகன் மார்ஷல் என்பவன்
டேவிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணங்கினான். டேவ், “மார்ஷல்?” என்றான்.
மார்ஷல், “நான்
உங்கள் பணியாளாகிய மார்ஷல்” என்றான். டேவ் மார்ஷலை நோக்கி, “பயப்படாதே
நான் உனக்கு இரக்கம் காட்டுவேன். உன் தந்தை ஜோன்ஸ் இன் நிமித்தம் இதைச் செய்வேன்.
உன் பாட்டனான ஷாமின் நிலங்களையெல்லாம் உனக்குத் தருவேன். நீ எப்பொழுதும் எனது
பந்தியில் உண்பாய்” என்றான். மார்ஷல் மீண்டும் டேவை வணங்கினான். மார்ஷல், “உங்கள்
பணியாளாகிய என்னிடம் நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள். நான் செத்த நாயைக்
காட்டிலும் மேலானவன் அல்ல” என்றான். அப்போது டேவ் அரசன் ஷாமின் வேலைக்காரன் சென் ஐ
அழைத்தான். டேவ் சென் ஐ நோக்கி, “உன் எஜமானரின்
பேரனாகிய மார்ஷலிற்கு ஷாம் குடும்பம் மற்றும் ஷாமுக்கும் சொந்தமான எல்லாவற்றையும்
கொடுத்துள்ளேன். நீ அந்த நிலத்தைப் பயிர் செய்வாய். உன் மகன்களும் வேலையாட்களும்
மார்ஷலிற்காக இதைச் செய்ய வேண்டும். நீ பயிர்களை அறுவடைச் செய்து விளைச்சலைச்
சேர்ப்பாய். அப்போது உன் எஜமானனின் பேரனான, மார்ஷல்
உண்பதற்குத் தேவையான உணவைப் பெறுவான். உனது எஜமானின் பேரன், எப்பொழுதும்
என் பந்தியில் ஆகாரம் உண்பான்” என்றான். சென் இற்கு 15 மகன்களும் 20 வேலைக்காரரும்
இருந்தனர். சென் டேவ் அரசனை நோக்கி “நான் உங்கள் பணியாள், ஆண்டவனாகிய
எனது அரசன் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றான். மார்ஷல்
ராஜகுமாரனைப்போல் டேவின் பந்தியில் உணவுண்டான். மார்ஷலிற்கு மோனிஷ் என்னும் சிறிய
மகன் இருந்தான். சென் இன் குடும்பத்தின் ஜனங்கள் அனைவரும் மார்ஷலின்
வேலையாட்களாயினர். மார்ஷல் இரு கால்களும் முடமானவன். மார்ஷல் மேற்கு ஆசியாவில்
வாழ்ந்தான். ஒவ்வொரு நாளும் அவன் அரச பந்தியில் உணவுண்டான்.
செயல்பாடு
Comments
Post a Comment